செயற்கை நுண்ணறிவு என்ற ஏஐ டெக்னாலஜி மூலம் கூகுள் மேப் செயல்பட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன


      
Published on: 4th February 2024 06:56 PM

செயற்கை நுண்ணறிவு என்ற ஏஐ டெக்னாலஜி மூலம் கூகுள் மேப் செயல்பட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

கூகுள் மேப்ஸ் மக்களின் வாழ்க்கையை மிகவும் எளிதானதாக மாற்றி விட்டது. இண்டர்நெட் உதவியுடன் பயணம் நமக்கு மிகவும் சௌகரியமானதாக மாறிவிட்டது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் நீங்கள் செல்ல நினைக்கும் இடத்தை தேடினால் மட்டும் போதும். உங்களுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் கிடைத்துவிடும்.

இந்த சேவை உலகம் முழுவதும் உள்ள லொகேஷன்கள் மற்றும் பகுதிகளின் விரிவான தரவுகளை வழங்குகிறது. நிலையான சாலை வரைபடங்களுடன் Google Maps பல்வேறு இடங்களில் சாட்டிலைட் மற்றும் ஏரியல் புகைப்படங்களை வழங்குகிறது. இன்னும் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் அங்குள்ள டிராஃபிக் போன்றவை முதற்கொண்டு நம்மால் தெரிந்து கொள்ள முடியும். சிலசமயங்களில், கூகுள் மேப் பயன்படுத்துபவர் சிலர் தவறான வழிகாட்டுதல் காரணமாக சிக்கலில் தவித்ததாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது செயற்கை நுண்ணறிவு என்ற ஏஐ டெக்னாலஜி மூலம் கூகுள் மேப் செயல்பட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே இனிஉரையாடல்கள் மூலம் நீங்கள் தேவையான தகவல்களை பெறலாம்.மஞ்சள் நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட உணவகத்திற்கு செல்ல வேண்டும் என்று உரையாடினால் உடனே அதற்கு ஏற்றவாறு அருகாமையில் உள்ள மஞ்சள் நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட உணவகம் இருக்கும் இடங்களை காட்டும். ஒரு கேள்வியோடு நின்று விடாமல் உரையாடல் போல் உங்கள் தேடல்கள் குறித்து கூடுதல் விவரங்களையும் இனி கூகுள் மேப்பில் கேட்டு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 250 மில்லியன்களுக்கு மேலான இடங்கள் குறித்த தகவல்களை கூகுள் மேப்பில் ஸ்டோர் செய்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்