தொடர்ந்து 2வது நாளாக உயர்ந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?


      
Published on: 7th May 2024 12:39 PM

தொடர்ந்து 2வது நாளாக உயர்ந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. இதற்கிடையே கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில், இன்று மேலும் உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.240 உயர்ந்து ரூ.53,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.6,640-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.88.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்