நீயெல்லாம் ஒரு மனுஷனா... உனக்கு எதுக்கு பல பெண்களோட வாழ்க்கை? தனுஷை டார் டாராக கிழித்த பிரபலம்


      
Published on: 24th April 2024 11:12 AM

நீயெல்லாம் ஒரு மனுஷனா... உனக்கு எதுக்கு பல பெண்களோட வாழ்க்கை? தனுஷை டார் டாராக கிழித்த பிரபலம்

நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் போலி வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் இருவரும் பிள்ளைகளுக்காக இணைய வேண்டும் எனவும் பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து

நடிகர் தனுஷும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கும் லிங்கா, யாத்ரா என இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். சுமார் 18 ஆண்டுகள் சிறப்பாக சென்றுகொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கையில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் கடந்த 2022-ம் ஆண்டு தாங்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் கூட்டாக அறிவித்தனர்.

பேச்சுவார்த்தை தோல்வி

தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடியின் இந்த அறிவிப்பு அவர்களது குடும்பத்தினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் பொருட்டு இருவீட்டாரும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்ததால் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள்.

தனுஷ் ஐஸ்வர்யா போலி வாழ்க்கை வாழ்கிறார்கள்

விவாகரத்து அறிவிப்புக்கு பின்னரும் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் படம் வரும் போது ஒருவருக்கொருவர் வாழ்த்திக் கொள்வது மட்டுமின்றி தங்களது மகன்களின் பள்ளி விழாவிலும் ஒன்றாக கலந்துகொண்டனர். இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய தயாரிப்பாளர் கே ராஜன், அது போலி வாழ்க்கை என சாடி உள்ளார். சினிமாவில் நடிப்பதை போல் நிஜ வாழ்க்கையிலும் நடித்துக் கொண்டிருக்கும் ஒரே தம்பதி தனுஷும் ஐஸ்வர்யாவும் தான் என வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

 

தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு வார்னிங்

தொடர்ந்து பேசிய கே ராஜன், குடும்பமா அது? தனுஷ் ஒரு மனுஷனா? ஐஸ்வர்யா ஒரு பொம்பளையா? இப்படி கேடு கெட்டத்தனமா நடந்து பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டார்களே என பலர் பேசும் அளவுக்கு வாழ்லாமா? மகன்களுக்காக இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள் என கூறியுள்ளார்.

பல பெண்களோடு வாழ்க்கை

மேலும் பேசிய அவர், தனுஷ் உனக்கு எதுக்கு பல பெண்களோட வாழ்க்கை, ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் தமிழ் பண்பாடு. நான் நேரடியா எதுவும் சொல்லக்கூடாதுனு நெனச்சேன். ஆனா என் மனசு ஒத்துக்கல. கோர்ட் வரைக்கும் போன பிறகு உங்களை என்ன நாகரீகமா பேசுறது. தமிழ் பண்பாட்டை காப்பாற்ற வேண்டும் என நினைத்தால் தயவு செய்து இருவரும் சேர்ந்து வாழுங்கள் என அந்த பேட்டியில் கே ராஜன் பேசி இருக்கிறார்.


தொடர்புடைய செய்திகள்