நல்ல சம்பளத்தில் 30,000 காலிப்பணியிடங்கள்… இன்று ஒரு நாள் மட்டுமே….!!! உடனே பதிவு செய்யுங்கள்


      
Published on: 24th February 2024 03:40 PM

நல்ல சம்பளத்தில் 30,000 காலிப்பணியிடங்கள்… இன்று ஒரு நாள் மட்டுமே….!!! உடனே பதிவு செய்யுங்கள்

இன்று பிப்ரவரி 24ம் தேதி மிஸ் பண்ணாதீங்க. சென்னையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் சென்னை ராணி மேரி கல்லூரியில் இன்று நடைப்பெற இந்த தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 30,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளார். 

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் இன்று பிப்ரவரி 24ம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சென்னை ராணி மேரி கல்லூரியில்  இன்று காலை 8 முதல் மாலை 3 மணி வரை நடைப்பெறுகிறது. 

இந்த முகாமில் கலந்து கொண்டு அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். இந்த வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 300க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் 30,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தோ்வு செய்வதற்காக பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டதாரிகள், பட்டயப் படிப்பு படித்தவா்கள், ஐடிஐ தொழில் கல்வி பெற்றவா்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவா்கள் உள்ளிட்ட தகுதியுள்ள நபா்களுக்கும் பணி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தனியாா் துறையில் பணிபுரிய ஆா்வமும், திறமையும்  உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பு  முகாமைப் பயன்படுத்திக் கொள்ளலாம். tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து, உங்களுக்கான வேலைவாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்க.


தொடர்புடைய செய்திகள்