இடதுபுறமாக ஸ்வைப் செய்யவும்
முகப்பு | சினிமா | சீரியல் | செய்திகள் | |
வீடியோ பார்க்க இடதுபுறமாக ஸ்வைப் செய்க | ||||
👇விளம்பரம்| தொடர்பு கொள்ள கிளிக் செய்யவும்👇 ![]() |
கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் பலி- 5 பேர் கைது!!!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள 5 கிராமங்களில் கள்ளச்சாராயம் அருந்திய 14 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பங்கலி, பாதல்புரி, மராரி கலன், தெரேவால் மற்றும் தல்வண்டி குமான் ஆகிய 5 கிராமங்களில் நேற்று இரவு கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவம் குறித்து அறிந்து வந்த போலீசார் முக்கிய குற்றவாளிகளான பிரப்ஜித் சிங், குல்பீர் சிங், சாஹிப் சிங், குர்ஜந்த் சிங் மற்றும் நிந்தர் கவுர் ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் குறித்து வீடு வீடாகச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடிகுண்டு வெடித்து 13 பேர் பலி!!
இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் ராணுவ வீரர்கள் 4 பேர் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். அப்போது எதிர்பாராத வகையில் விபத்து நடந்துள்ளது. வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின் போது வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் 9 பேர், நான்கு இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஏராளமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணம், கருத் மாவட்டத்தின் சாகரா கிராமத்தில், ராணுவ கிடங்கில் நீண்டகாலமாக சேமிக்கப்பட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த வெடிபொருள்களை அழிக்கும் பணி நடந்தது.
வெடிபொருள் அழிப்பு நடவடிக்கையின் போது உரிய விதிமுறைகள் பின்பற்றப் பட்டனவா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.