இடதுபுறமாக ஸ்வைப் செய்யவும்
முகப்பு | சினிமா | சீரியல் | செய்திகள் | |
வீடியோ பார்க்க இடதுபுறமாக ஸ்வைப் செய்க | ||||
👇விளம்பரம்| தொடர்பு கொள்ள கிளிக் செய்யவும்👇 ![]() |
கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் பலி- 5 பேர் கைது!!!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள 5 கிராமங்களில் கள்ளச்சாராயம் அருந்திய 14 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பங்கலி, பாதல்புரி, மராரி கலன், தெரேவால் மற்றும் தல்வண்டி குமான் ஆகிய 5 கிராமங்களில் நேற்று இரவு கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவம் குறித்து அறிந்து வந்த போலீசார் முக்கிய குற்றவாளிகளான பிரப்ஜித் சிங், குல்பீர் சிங், சாஹிப் சிங், குர்ஜந்த் சிங் மற்றும் நிந்தர் கவுர் ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் குறித்து வீடு வீடாகச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.